SHARE

-யாழில் அதிகாலையில் சம்பவம்

யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளரும், காலைக்கதிர் பத்திரிகை விநியோக முகாமையாளருமான 56 வயதுடைய செல்வராசா இராசேந்திரம் என்பரே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கிலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் கொழும்புத்துறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிளில் முகத்தை முடிக்கட்டிவந்த வாள்வெட்டுக்கும்பல் குறித்த நபர்மீது வாளால் வெட்டிவிட்டு தப்பித்துள்ளது.
 குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வாள்வெட்டுக்கிலக்கான செய்தியாளர் கோப்பாய் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email