SHARE
இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களுடனான ஆவணப் படம் ஒன்றை சர்வதேச ஊடகமான அல்ஜஸீரா (Aljazeera) இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்த்தங்களாக சுமார் 60 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கும் அவ்வூடகம், குறித்த ஆவணப்படத்தில் கடத்தல்களின் பின்னணி, அவர்களை இயக்குபவர்கள், கடத்தப்படுபர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொடூரமான சித்திரவதைகள் என அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிகொண்டுவந்துள்ளது.

இதேவேளை இந்த ஆவணப்பட உருவாக்கத்திற்கு உதவிய பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி கீத்  குலசேகரம், தற்போதுள்ள நல்லாட்சி அரசிலும் கடத்தல் சித்திரவத்தைகள் இடம்பெறுவதற்கான ஆதாரபூர்வ தவலை இதில் தெரிவித்துள்ளார்.
அகதித்தஞ்சக்  கோரிக்கையாளர்களின் வழக்குகளையும் நீண்ட காலமாக கையாண்டுவரும் அவர், புதிய அரசாங்கம் அட்சிக்கு வந்ததன் பின்னர்
சித்திரவதைகள் தொடர்பில்   குறைந்தது 80 வழக்குகளையும் நடப்பாண்டான 2018 இல் 6 வழக்குகளை மருத்துவ மற்றும் பல ஆதரங்களுடன் கையாண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
தவிர, கடத்தப்படவர்களின் உறவுகள் வீதிகளில் நின்று நீண்ட காலமாக தமது உறவுகளை தேடி போராடி வருகிறார்கள். மறுபக்கத்தில் அரசாங்கம் காணமல் போனாருக்கான அலுவகங்களை அமைத்தும் எந்தவித தீர்வையும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை என இதில் கூறப்பட்டுள்ளது.
குறித்த காணொளியை பார்க்க எங்கே அழுத்துங்கள் 
Print Friendly, PDF & Email