பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் எனக் குறிப்பிட்ட அவர், தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மக்கள் ஆணை, கூட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் அளிக்கப்பட்ட மக்களின் ஆணைக்கு மாறாக நாடாளுமன்றம் செயற்படக் கூடாது என்றும் சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.