SHARE

இரா­ணு­வத்­தி­டம் இருந்து துப்­பாக்­கி­யைப் பறித்­துச் சென்றனர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட சந்­தேக­ந­பர்­கள் நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

வழக்­கின் முத­லாம் மற்­றும் இரண்­டாம் சாட்­சி­க­ளான இரா­ணு­வத்­தி­ன­ரும், மூன்­றாம் நான்­காம் சாட்­சி­க­ளாக வன­வ­ளப் பாது­காப்பு பிரிவு உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் சந்­தே­க­ந­பர்­கள் மூவ­ரை­யும் நீதி பதி முன்­னி­லை­யில் அடை­யா­ளம் காட்டினர்.

சந்­தே­ந­கர்­கள் மூவ­ரை­யும் எதிர்­வ­ரும் 11ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

பின்­னணி
முல்­லைத்­தீவு ஆண்­டான்­கு­ளத்­தில் கடந்த 26ஆம் திகதி மரம் கடத்­தப்­ப­டு­கின்­றது என்று இரா­ணு­வத்­தி­ன­ருக்­குத் தக­வல் கிடைத்­தது. வன­வ­ளப் பாது­காப்­புப் பிரிவு இந்­தத் தக­வலை வழங்­கி­யி­ருந்­தது. இரா­ணு­வத்­தி­னர் வீதிச் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

மரங்­க­ளு­டன் வந்த வாக­னம் ஒன்றை மறித்­துச் சோத­னை­யிட்­டுள்­ள­னர். வாக­னத்­தில் வந்­த­வர்­க­ளுக்­கும், இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் இடையே வாய்த்­தர்க்­கம் ஏற்­பட்­டுள்­ளது. வாக­னத்­தில் வந்த இரு­வ­ரும் இரா­ணு­வத்­தி­ன­ரின் துப்­பாக்­கி­யைப் பறித்­துக் கொண்டு காட்­டுப் பகு­திக்­குள் ஓடித் தப்­பி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

27ஆம் திகதி பொலி­ஸா­ரும், இரா­ணு­வத்­தி­ன­ரும் இணைந்து அந்­தப் பகு­தி­யில் தேடு­தல் நடத்­தி­னர். சில­ரி­டம் விசா­ரணை நடத்­தி­ய­தில் சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் நடத்­தி­ய­வி­சா­ர­ணை­க­ளில் துப்­பாக்கி மத­கின் கீழ் இருந்து மீட்­கப்­பட்­டது. எனி­னும் பிர­தான சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

பிர­தான சந்­தே­க­ந­பர் தேடப்­பட்­டு­வந்த நிலை­யில் அவர் 28ஆம் திகதி நீதி­மன்­றில் சர­ண­டைந்­தார்.
இரா­ணு­வத்­தி­ன­ரின் பணிக்கு இடை­யூறு விளை­வித்­தமை, ஆயு­தத்­தைப் பறித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளின் கீழ் சந்­தே­ந­பர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.
இது தொடர்­பான வழக்கு முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. சந்­தேக நபர்­கள் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

Print Friendly, PDF & Email