SHARE

பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் Paul Sacully MP யை சந்தித்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இனப்படுகொலை தொடர்பிலான இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் இளவரசன் ஜெயபாலன் தலைமையில் நேற்றய தினம் (24.03.2018) நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பிலும் தற்போதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன அழிப்பு மற்றும் அவற்றுக்கு எதிரான நட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்ட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த இக்கலந்துரையாடலின் குழுவில் திலக் ஆண்ரியுஸ், கஜானன் ஞானசேகரம், கோபாலகிஷ்ணன் குகச்செல்வம், கோவிந்தப்பிள்ளை லிங்கேஸ்பரன், இகிஸ்ணமூர்த்தி உமாராஜ், பாலசிங்கம் குமரேசன், சிவஞானலிங்கம் சுபாஷ்கர், கணேசபிள்ளை ஜதுர்த்தன், வரதராஜா மோகனரூபன், கௌசிகன் ஸ்ரீகுமார், பிரான்சிஸ் வசந்தராஜன், அஷாந்தன் தியாகராஜா, இளையதம்பி கலைவாணன், புஸ்பாதரன் புத்திரசிகாமணி இவசந்தகுமாரி சந்திரபாலன் ஆகியோர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email