SHARE

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தின் லிந்துலை பகுதியில் இன்று (03.03.2018) நண்பகல் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

சிரியா நாட்டில் இடம்பெறும்  இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு அங்கு உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது .

Print Friendly, PDF & Email