யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவை சேர்ந்த சாமூவேல் எனும் மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்.பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.