SHARE
image_pdfPRINT

கொலைமிரட்டல் அதிகாரி பிரியந்த பெர்ணான்டோ பாடநெறி ஒன்றை கற்பதற்காக சீனா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் விவகாரத்தினையடுத்து விசாரணைகளுக்காகவே அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது இத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி சீனா செல்லவுள்ள அவர் அங்கு 5 மாதகாலம் தங்கியிருந்து பாடநெறியை கற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.