SHARE

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று முந்தினம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். திரு. கதிரித்தம்பி சிவானந்தம் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு போது இவரது ஒரு மகன் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு, பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய முற்பட்டிருந்தனர். அவ்வாறு ஏதாவது சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் குடும்பத்துடன் காணாமல் போக நேரிடும் என்று எச்சரித்த அவர்கள், லண்டனில் வாழும் அவரது மற்ற மகனும் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவரை தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

வீட்டில் புகுந்து தேடுதல் நடாத்திய அவர்கள், மேற்படி வயோதிபரை கண்டபடி தாக்கிவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அவர் அடிகாயங்களுடன் வைத்திசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email