SHARE

சிறிலங்காவில் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

எனினும், சரியான நேத்தில் இது குறித்து பதிலளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

ஆங்கில ஊடகம் ஒன்றின் புதுடெல்லி செய்தியாளரிடமே இந்திய அதிகாரிகள் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
.
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்தவாரம் புதுடெல்லிக்கு வரவுள்ளதையும் இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற சர்ச்சையை முதலில் கிளப்பி விட்டவர் கோத்தாபய ராஜபக்சவே என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் இதுபற்றிப் பேசப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Print Friendly, PDF & Email