இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று இரண்டாவது நாளாகவும் அங்கு பேச்சுக்களை நடத்தவுள்ளது.
நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோரைச் சந்தித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சுக்கள் இடம்பெறும் என்று தெரியவருகிறது.