SHARE

தமிழ்நாட்டில்விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா என்பது குறித்து இந்திய மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி.

புதுடெல்லியில் நேற்று, இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா என்று இதன்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், ஏ.கே. அன்ரனி, இந்திய மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று  சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

அதுபற்றி மேலதிகமான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.

Print Friendly, PDF & Email