SHARE

யாழ்ப்பாண வடமராட்சி – மணல்காடு பகுதியில் அமைந்துள்ள சவுக்குமரக் காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை தொடக்கம் தீப் பரவல் ஏற்பட்டு வருவதாக நிலையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தீயணைப்பு பணிகளின் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மணற்காடு கிராம அலுவலர் தெரிவிக்கையில்,

தீ

ஏற்படதன் காரணம் குறித்து இன்னமும் அறியப்படவில்லை எனவும் தீயால் இதுவரை சுமார் 1 கிலோ மீற்றர் வரையான காடு எரிந்து கருகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து பிரதேச மக்களுடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தீயணைப்பு முயற்சியின் பயனாகவே தீ ஓரளவு பரவாது தடுக்கப்பட்டதாகவும் இல்லையேல் முற்று முழுவதுமாக எரிந்து சாம்பலாகியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Print Friendly, PDF & Email