SHARE

தமிழீழமே எமது நாடு. தமிழீழம் ஒன்றே எமது தீர்வு என்ற கோசத்துடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் தேசிய சுதந்திர தினமான இன்று (4) அதனை கரிநாளாக பிரகடணப்படுத்தி தமிழர் தாயகம் உட்பட உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகின்றனர்.

அந்தவகையில் இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் தமிழீழமே எமது நாடு தமிழ் ஈழம் ஒன்றே எமது தீர்வு என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Print Friendly, PDF & Email