SHARE
image_pdfPRINT

சுதந்திர தினத்தினை (04.02.2025) கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றையதினம் காலை 11 மணியளவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.