SHARE

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய , நாளை மறுதினம் ஜனாதிபதியை அவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் , சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email