SHARE

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து தொல் பொருள் திணைக்களம் வரையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் அரசியில் தலைவர்கள் மத குருமார்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் போது மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு கைதானவர்களின் விடுதலையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

குறித்த ஆரப்பாரட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் மற்றும் மிரட்டல் விடக்கும் நோக்கில் சிறிலங்கா அரசின் அதிரடிப்படைகளும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 ஆம் திகதி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலய பூசகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை இன்றுவரையில் விடுவிக்காது தடுத்து வைத்துள்ள நிலையலேயே அவர்களை விடுவிக்க கோரி மேற்படி ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email