SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்

ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ‘தேசிய தமிழ் மரபு திங்கள் நிகழ்வு – 2024‘ இலண்டனில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொண்டு வந்த இந் நிகழ்வு, தமிழர் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் சிலம்பாட்டம், கோலாட்டம் என மிகக் கோலாகலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) Crystal Hayes எனும் இடத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் மங்கள வாத்திய இசை முழங்க சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அரங்கு நிறைந்த மக்களுடன் விழா இனிதே ஆரம்பமானது.

இதில் விசேடமாக இலங்கைத் தமிழர்கள் ஒரு கால வரையறையற்ற பாரம்பரியம் எனும் சிறப்பு கண்காட்சியானது தமிழ் தகவல் நடுவம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் என்பவற்றின் ஐக்கிய இராச்சிய மரபுரிமை சமூகத்தினால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒரு சமூகத்தின் பண்பாடு மரபுரிமைகளை விளங்கிக் கொள்வதற்கு அது சார்ந்த சமூக வரலாற்றை புரிந்து கொள்வது அக் கண்காட்சி இன்றியமையாததாகும்.

இதில் தமிழர்களின் பண்டைய வரலாறு அவர்களின் வாழ்வியல் அம்சங்கள் தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்து அரிய பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் தமிழீழத்தில் இடம்பெற்ற நிழல் அரசாங்க அமைப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழர் மீதான தொடர் இனவழிப்பு சாட்சியங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

படங்கள் – சிதம்பர சுப்பிரமணியம் திருச்செந்தில்நாதன், அனுசன் பாலசுப்பிரமணியம்

Print Friendly, PDF & Email