SHARE

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் இல் நடைபெற்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் இந்த மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல் 6.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் கவுன்சிலர் நாகுஸ் நரேந்திரா அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான மதிப்பிற்குரிய திரேசா வில்லியம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பிலான சிறப்பு பேச்சாளர்களின் உரைகள் TIC யின் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருது மறைந்த இயக்குனர் திரு வரதகுமார் ஞாபகார்த்த விருது மற்றும் மனித உரிமைகள் சார்ந்த கலை நிகழ்வுகள் என பெருமளவிலான மக்களின் வருகையுடன் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் மேற்படி நிகழ்வினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பல வழிகளில் செயலாற்றிய TIC யின் செயற்பாட்டாளர்கள் நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அந்தவகையில் செயற்பாட்டாளர்களான றோய் ஜாக் ஷன் ஜேசுதாஸ், கஜானன் சுந்தரலிங்கம், அனுசன் பாலசுப்பிரமணியம், இன்பராஜ் பத்திநாதர், லக் ஷ்மன் திருஞானசம்பந்தர், டிலக்‌ஷன் மனோரஜன், விஜய் விவேகானந்த், புகழினியன் விக்டர் விமலசிங்கம், சிதம்பர சுப்பிரமணியம் திருச்செந்தில்நாதன், கோகுலன் குணசீலன், ரூபன் மத்தியாஸ், கனிஸ்டன் விமலதாசன், வசந்தி அரவிந்தன், சிந்துஜா ஜெயன், துஷானி ராஜவரோதயம், அஜய் குமார் கணேஸ் குமார், நிசாந்தன் நித்தியானந்தன், அனோஜன் சிவசிதம்பரம், றொனால்ட் அன்ரனி உதயகுமார், றொகான் அன்ரனீஸ் உதயகுமார், றொனிஸ்ரன் அன்ரனீஸ் உதயகுமார், நிலக்சன் சிவலிங்கம், லம்போதரன் நாகராசா, பவிஷன் போல் ராஜ், பவிஷன் போல்ராஜ், அருணோதயன் சுப்பிரமணியம், தர்சன் நிர்மல், அபிந்தன் சுப்பிரமணியம், முரளீதரன் விஜயசுந்தரம், செனவிரட்ண பண்டார, பிரியங்கன் அருமைராசா, கோகுலன் சிவ சிதம்பரம், பிரியதர்சன் கனகலிங்கம், சசீஸ்கண்ணா நடராஜா, தேவராசா கஜன், சர்வேந்தினி பேரின்பநாயகம், சுகன் விக்ணேஸ்வரன், எபிநேசர் கனேசலிங்கம், பிரசாந் இராசரத்தினம், தனுஷாத் மரியநேசன், டிலான் சசிகரன், கனகசபாபதி கார்த்திகேசன், தனபால் சுப்ரமணியம், அயுட்சன் அருள்தாஸ், இராசரட்ணம் டனிதன், இரட்ணசிங்கம் ஜனனன், மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, விதுரா விவேகானந்தன், சசிகரன் செல்வசுந்தரம், அழகேந்திரம் நிறோஜன், கணேசமூர்த்தி விதுஷன், நவரட்ணம் கிருஷாந், மால்சன் சுதர்சன், ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Print Friendly, PDF & Email