SHARE

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்தே இந்த வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்தன.

இது தொடர்பான ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடலோர பொலிஸார், சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளில் மொத்த மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாயளவில் இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Print Friendly, PDF & Email