SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்

மாவீரர் வாரத்தின் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் தமிழர் செறிந்து வாழும் இடம் எங்கும் உணர்ச்சியுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாள் Shepherds Bush Donar Center இல் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சிறப்பாக ஏற்பாடு செய்து இடம் பெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்குருதிக் கொடை நிகழ்வில், தமிழ் இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரை தியாகம் செய்த வரலாற்று நாயகர்களுக்காய், பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் முன்வந்து, உணர்வோடு உதிரம் வழங்கினர்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட கொடையாளிகளை கொளரவித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதேவேளை, குறித்த நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியத் தலைவரின் 69 அவது அகவை தின நிகழ்வும் இடம்பெற்று கேக் வெட்டி மகிழப்பட்டது.

அதிகமான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றமையால் பல்வேறு வேற்று மொழி பேசும் மக்களும் இவ்விடத்தில் திரண்டு உதிரக் கொடையாளிகளிடம் அங்கு நடக்கும் விடயம் எதற்காக இடம் பெறுகின்றது என்று கேட்டு அறிந்து கொண்டதுடன் எதிர்வரும் காலங்களில் தாமும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக வாக்குறுதியளித்தனர்.

Print Friendly, PDF & Email