SHARE

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய பாதுகாப்புச் சட்டம் ஆகிய உத்தேச சட்ட வரைவுகள் குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிதமிஞ்சிய அதிகாரத்தை வழங்கும் வகையிலானது எனவும், மனித உரிமைகளை வரையறுக்கும் வகையிலானது எனவும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரவீனா ஷம்தாசானி தெரிவித்துள்ளார்.