SHARE
image_pdfPRINT

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது  உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் எனக் கூறிய விடயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 

இந்தநிலையில்,  இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் உலகத் தமிழர் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் இனிப்பு வழங்கி இதனை கொண்டாடினர். 

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பது தொடர்பில் பழ. நெடுமாறன் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்த பின்னர் இலங்கையிலும், உலகில் வாழும் தமிழ் மக்களிடத்தில் பரபரப்பான ஒரு நிலையை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.