நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படவுள்ள இலங்கை தேசத்தின் இரண்டாவது சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜெனிற்றா, நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலன்சுவாமிகள் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.