SHARE

ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர் தீபச் செல்வனின் ‘பயங்கரவாதி‘ நாவல் வெளியீட்டு விழா தமிழர் தைத்திருநாளாம் பொங்கல் விழாவான நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்படுகின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட அரங்கில் பி.ப. 3 மணிக்கு இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

எம் ஈழ தேசத்தின் படைப்பிலக்கியத்தில் தனித்துவமான படைப்பாளனாக திகழும் தீபச்செல்வன் முன்னர் நடுகல் நாவல் வாயிலாக பெரும் புரட்சி ஒன்றினை செய்திருந்தார். அந் நாவல் சிங்கள இனத்தவரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததுடன் அவர்களின் எண்ணங்களை புரட்டிப்போடுமளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்தியருந்தது.

இந்நிலையில் தீபச்செல்வனின் 2 ஆவது நாவலான பயங்கரவாதி யாழ்ப்பாணத்தின் இருண்ட காலத்தையும் வன்னியின் ஒளிமிகுந்த காலத்தையும் அத்துடன் ஒரு மாணவத் தலைவனின் வீரத்தையும் வேட்கையும் காதலையும் தாங்கியதாக நாளை வெளிவருகிறது.

Print Friendly, PDF & Email