SHARE

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பின்னா் ஊடகவியலாளா்களிடம் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email