SHARE

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த சந்திப்பில் மனித உரிமைகள், பொருளாதார மீட்பு, GSP+ வரிச்சலுகை , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email