SHARE

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35 ஆவது நினைவு தினத்தின் இறுதிநாள், இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email