SHARE

எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்று சேவையில் ஈடுபடா என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பஸ் சங்கங்களுடன் மேற் கொள்ளப்பட்ட கலந்துரையாட லுக்குப் பின்னர் யாழ். மாவட்ட செயலாளருடன் கலந்துரை யாடியபோதும் எரிபொருளைப் பெறுவதற்கான முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் இன்று ஸ்தம் பிதமடையும். தூர பஸ் சேவையும் இடம் பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email