SHARE
image_pdfPRINT

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்திற்கு வருகை தந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

24 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார்.

சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்த தம்மிக்க பிரசாத், உயிர்த்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.