காலிமுகத்திடலில் இன்று ஆறூவது நாளாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலளித்துள்ளார்கள்.
‘மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள்@ என்ற தலைப்பில் தமது கோரிக்கைகள் உள்ளடங்கிய பதாதைகள் இன்று காலிமுகத்திடலில் காணப்பட்டன. அதில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன,
01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
03. அத்தியாவசிய சேவைகள் நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.
04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
05. ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.
இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை தமது போராட்டத்தை கைவிட தாம் தயாராக இல்லை என அவர்கள் இன்று அறிவித்துள்ளார்கள்.