SHARE

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திங்கள்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தை காணொளி முறையில் எளிமையாக திறந்து வைத்துள்ளனர்.

முன்னதாக,யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருந்தார். 1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு  கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில்  திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தநிலையில் இன்றையதினம் எளிமையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email