SHARE
image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை, ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர்.

ஜெனீவாவில் நேற்றிரவு(புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் பி.சி. அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.