SHARE

அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இரண்டு கைதிகளை மண்டியிடுமாறு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 08 கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

ஆகவே கடந்த உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை எதிர்வரும் ஆவணி 9 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email