சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களை பிரித்தானியா கொள்வனவு செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று புதன் கிழமை காலை தமிழ் இளையோர் மூவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானியாவின் பிரபல விற்பனை நிலையங்களிற்கு முன்னாலேயே மேற்படி இளையோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் ”தமிழர்களை இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசின் இரத்தக்கறை படிந்த உற்பத்திப் பொருட்களை பிரித்தானிய அரசே கொள்ளவனது செய்யாதே” மற்றும் ”தமிழர்கள் மீதான தொடர் இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவர உதவி செய்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.