SHARE
image_pdfPRINT

கோப்பாய் கொவிட்-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களிற்கு தடுப்பு ஆலோசனை மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டதுடன் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தலைவரின் சம்மதத்துடன் ஒவ்வொருவருக்கும் கல்லூரியில் இருந்த வேப்பமரகன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

தென்னிலங்கையினை சேர்ந்தவர்களே  சிகிச்சையின் பின்னராக வீடு திரும்பியுள்ளனர்