SHARE

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர் 15 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும் முல்லைத்தீவு 2 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் புதிதாக எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளில் நேற்று முன்தினம் 378 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று 385 பேரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலே தனிமைப்படுத்தல் முகாம்களில் ,சிகிச்சை நிலையத்தில் இருந்தவர்கள் சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
புதிதாக வடமாகாணத்தில் எவருக்கும் உறுதிப் படுத்தப்படவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email