SHARE

கிளிநொச்சி காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு ‘O.M.P’ அலுவலகத்துக்கு முன்னால் முன்னெடுத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவரி யோகராசா கனகரஞ்சினி ,

” நீதிக்காக நாம் காத்திருக்கின்றோம். பல போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.

அத்துடன், சர்வதேச நாடுகளில் இருப்பவர்கள், எங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றோம். சென்ற வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக்
பொம்மியோவை சந்திப்பதற்கு முயற்சித்தோம். கொரோனா தாக்கத்தால் அது முடியாமல் போனது. எனினும், அவரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது. அவர் நீதியை பெற்றுத்தருவார் என நம்புகின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email