SHARE
image_pdfPRINT

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக்  கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (28) வடக்கு, கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இன்று ஹர்த்தாலினாள் யாழ். நகரம் முற்றாக முடங்கியது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இன்றைய ஹர்த்தாலுக்கு யாழில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களும் முழுக்கதவடைப்புச் செய்து தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அதன்படி யாழ். ஐந்து சந்தியடிப் பகுதியும் வெறிச்சோடிக்காணப்பட்டது.

அதேவேளை, பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதேபோல கிளிநொச்சியிலும் தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமையை அரசு தடுத்தமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்து வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது.