SHARE

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நெறிப்படுத்தியும் மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் காத்திரமான ஒரு வகிபாகத்தினை நமது ஈழநாடு எதிர்காலத்தில் வகிக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், நமது ஈழநாடு மின்னிதழுக்கு தனது வாழத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களில் ஒன்றாக திகழ்ந்த ‘நமது ஈழநாடு’ நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் மின்னிதழாக இணைய வழியில் நேற்றைய தினம் வெளிவந்தது

இந்நிலையிலேயே, நமது ஈழநாடு மின்னிதழ் பத்திரிகைக்கு விக்னேஸ்வரன் தனது வாழ்த்து செய்தியை அனுப்பிவைத்துள்ளார்.

Print Friendly, PDF & Email