SHARE

“வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு 300 பக்தர்களை மாத்திரமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று யாழ். “மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.

அதேவேளை, அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபையில் நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500 ற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இருப்பினும், சுகாதாரத் துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோகபூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும்.

மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவையும் இம்முறை தடை செய்யப்படும் எனவும் பதில் முதல்வர் மேலும் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email