எமது ஆதரவை பெற்றுக்கொள்ள நினைக்கும் சகல வேட்பாளர்களுடனும் நாம் பேசத் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு குறித்து முல்லைத்தீவில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக இன்னமும் இறுதித் தீர்மானம் ஒன்றும் எடுக்கப்படவில்லை என கூறினார்.
வேட்பாளர்கள் விரும்பினால் அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது என்றும் அதில் அவர்கள் முன்வைக்கும் காரணிகளை தீர்வுகளை அவதானித்து எமது முடிவுகளை நாம் எடுப்போம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.