SHARE

அச்சுவேலி தெற்கு , அச்சுவேலி என்ற பகுதியைச் சேர்ந்த தாயும் மகனும் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

தம்பையா மகேந்திரன் என்பவருடைய மனைவியும், அவரது மகனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காணாமல் போன தாய் 40 வயதுடைய, ஜேவர்தன் உமயாலோகனா என்றும், அவரது மகன் 6 வயதுடைய ஜேவர்தன் ஜோகலவன் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இதே போன்று புறக்கோட்டையைச் சேர்ந்த நபரொருவரும் கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணமல் போன நபர் 24 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

Print Friendly, PDF & Email