SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஊா்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.