SHARE

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தற்று நடைபெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களில் நான்கு தாக்குதல்கள் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆயலம் உட்பட 4 இடங்களில் சரியாக காலை 8.45 மணிக்குக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலாயம் கொழும்பு Shgngri-la ஹோட்டல் Kingsbury ஹோட்டல் நீர்கொழும்பு செபஸ்ரியன் ஆகிய நான்கு இடங்களில் 8.45 மணிக்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து காலை 8.50 மணிக்கு Cinnamon Grand ஹோட்டலிலும் 9.05 மணிக்கு மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் பி.ப. 1.45 மணிக்கு தெஹிவளையிலும் பி.ப. 2.15 மணிக்கு கொழும்பு தெமட்டகொடையிலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email