SHARE

மாவீரர் தினத்தினை முன்னிட்டு பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் உன்னத கொடையான குருதிக்கொடையினை வழங்கியுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் உயிர் கொடுத்தவர் நினைவாக உதிரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் பெருந்திரளான இளையஞர்கள் முன்வந்து குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.

மாவீரர் தினத்தினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பிரித்தானியாவில் குருதிக்கொடை நிகழ்வினை ஏற்பாடு செய்யும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இம்முறையும் Coventry, Tooting, Menchester மற்றும் Royal College of Nursing, London ஆகிய குருதிக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், மேற்படி இடங்களில் உள்ள குருதிக்கொடை நிலையங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தேசத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைத்து தமது குருதியை கொடையாக வழங்கியுனர்.

Print Friendly, PDF & Email