தமிழீழ மண் மீட்பு போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களது குடும்பத்தினரை கௌரவப்படுத்து நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று நடைபெற்றது.
மாவீரர் நாளுக்காக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் உள்ள மாவீரர்களது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.
Harrow வில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களின் தந்தையர் யோகராசா அவர்கள் ஏற்றிவைக்க
தமிழீழ தேசிய கொடியினை பாலகுமார் வசந்தகுமார் என்று அறியப்படும் மனோஜ் அவர்களின்சகோதரனும் வடமேற்கு மாவீரர்பணிமனை பொறுப்பாளருமான கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்
தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல் மற்றும் நினைவுக் கல்லறைக்கான மலர் அஞ்சலி செலுத்தல் ஆகியன இடம்பெற்றதுடன் மாவீரர்களது குடும்பத்தினருக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றது.
இதேவேளை sutton னிலும் நேற்று மாவீரர் குடும்பத்தினர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.