SHARE
image_pdfPRINT

வன்னியின் கனகராயன் குளத்தைச்சேர்ந்தவர்களான கணவன் மனைவியாகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.கனகராயன் குளம் பரிசன்குளம் புளியங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்தவர்களான அ.நந்தகுமார்(நந்தன்- வயது 24) மற்றும் அவரது மனைவியான கௌதமி(வயது 18) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்காலிகமாக வசித்து வந்த வீட்டில்இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகின்ற போதும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை தகவல்கள் தெரிவிக்கின்றன.