SHARE

யாழ்.மன்னார் A -32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் குடும்ப பெண் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது கணவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் பண்டத்தரிப்பை சேர்ந்த குயின்ஸ் சாளினி (வயது 23) எனும் குடும்ப பெண்ணே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டு உள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

சங்குபிட்டி பாலத்தில் ஏறிய கனரக வாகனம், இயந்திரக் கோளாறு காரணமாக பாலத்திலிருந்து பின் நோக்கி வந்துள்ளது. அதன் போது , வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதியர் நிலை தடுமாறு வீதியில் வீழ்ந்துள்ளனர்.

வீதியில் விழுந்த கணவர் சுதாகரித்து உடனடியாக எழுந்த போதும், மனைவி எழும்ப தாமதித்தால், வாகனத்தின் சக்கரங்கள் அவர் மீது ஏறியுள்ளது. அதனால் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக அந்த இடத்திலிருந்தவர்களால் அந்தப் பெண் மீட்கப்பட்டு பூநகரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரது கணவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த குடும்பப் பெண்ணின் மீது கனரக வாகன சக்கரம் ஏறியதால், அவரது ஈரல் பகுதியில் கண்டல் காயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றபப்ட்டார். அவரது கணவர் சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கபப்ட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண்ணுக்கு இன்று மாலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்தும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை அவருக்கு நெஞ்சுப் பகுதி எலும்புக் கூட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email