SHARE
image_pdfPRINT

ஜீலை 5- கரும்புலிகள் நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேச விடுதலைக்காய் தம் உடல்களில் வெடியுடன் நடமாடிய உன்னத தியாகிகளாகிய கரும்புலிகள் நினைவு தினம் இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் முதற் கரும்புலி கப்டன் மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணின் மத்திய கல்லூரியில் இன்று நண்பகல் நினைவுகூரல் இடம்பெற்றது.

1987ம் ஆண்டின் இதே நாளன்று நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை படைகள் மீது விடுதலைப்புலிகளின் முதல் கரும்புலி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.